BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 February 2014

ஆம் ஆத்மி ஒரு கட்டைப்பஞ்சாயத்து கட்சி, பெண்களை மதிக்காத‌ கட்சி - அக்கட்சியின் முக்கிய பெண் தலைவர் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சி கட்டைப்பஞ்சாயத்து மனநிலை கொண்ட பெண்களை மதிக்காத‌ கட்சி - ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பெண் தலைவர் குற்றச்சாட்டு


ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான மது பாதுரியும் ஒருவர், இவர் தான் தற்போது ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார், மேலும் இது குறித்து இவர் கூறிய‌தாவது ஆம் ஆத்மி கட்சி தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் கட்டை பஞ்சாயத்து மனநிலை கொண்டவர்கள் என்றும், பெண்களை மனிதர்களாக கூட மதிக்காதவர்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே ஒரே நோக்கமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார், இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தெரிவித்ததாவது பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை ஆம் ஆத்மி கட்சி அளிக்கிறது என்றும், அவருக்கு போதிய அளவுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ வினோத்குமார் பின்னிக்கு அடுத்த படியாக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி மது பாதுரியும் வெளியேறியுள்ளது ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media