
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், அரசியலில் ஊழல்வாதிகளின் பெயர்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், கேஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, அவர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, சென்னை மயிலாப்பூரில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்கள் கேஜ்ரிவாலின் உருவ பொம்மையை கொலுத்த முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.