உத்தர பிரதேச மாநிலத்தில் பதினெட்டு வயது பெண் ஒருவர் தனது சகோதரருடன் கர்னல் என்ற இடத்தில் இருந்து சஹரன்பூருக்கு நேற்று கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் வழியில் சென்ற வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். வாகனத்தில் இருந்த நான்கு வாலிபர்கள் அவர்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வயலுக்கு சென்றனர். வயலிலேயே வைத்து அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவரது சகோதரரின் கண் முன்பே அந்த நான்கு வாலிபர்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பலாத்காரம் செய்த நால்வரையும் தேடி வருகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.