டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ஊழலில் ஈடுபடுவோர்கள் பட்டியலை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டார். இதையடுத்து, கேஜ்ரிவாலை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப் பட்டோரின் சார்பில் கண்டனங்கள் எழுந்தவாறு உள்ளது.
கேஜ்ரிவால் வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், கபில் சிபல் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த கபில்சிபல், தம் மீது அரவிந்த் கேஜ்ரிவால் அவதூறு பரப்புவதாக தெரிவித்தார். மேலும் தமக்கு எதிராக ஒரே ஒரு புகாரை அவர் நிரூபித்தாலும் கூட உடனே பதவி விலகத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதை நிரூபிக்கத் தவறினால் கேஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகுவாரா என்று கபில்சிபல் கேஜ்ரிவாலுக்கு சவால் விடுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தம் மீது சுமத்தப்பட்டப் புகாரை நிரூபிக்க கேஜ்ரிவாலுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறேன் என்று கபில்சிபல் கெடு விதித்துள்ளார்.
கேஜ்ரிவால் வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், கபில் சிபல் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த கபில்சிபல், தம் மீது அரவிந்த் கேஜ்ரிவால் அவதூறு பரப்புவதாக தெரிவித்தார். மேலும் தமக்கு எதிராக ஒரே ஒரு புகாரை அவர் நிரூபித்தாலும் கூட உடனே பதவி விலகத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதை நிரூபிக்கத் தவறினால் கேஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகுவாரா என்று கபில்சிபல் கேஜ்ரிவாலுக்கு சவால் விடுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தம் மீது சுமத்தப்பட்டப் புகாரை நிரூபிக்க கேஜ்ரிவாலுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறேன் என்று கபில்சிபல் கெடு விதித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.