பொலிவியாவில் சட்டமன்றத்தில் பொலிவியா காங்கிரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது . அந்த சட்டத்தின் படி 10 வயது ஆன குழந்தைகளும் வேலைக்கு போகலாம் . ஆனால் அவர்கள் வேலைக்குப் போவது அவர்களின் கல்வியை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது . இவர்களை வேலை செய்ய அனுமதிப்பது அவர்களின் குடும்பத் தேவையை சரி செய்வதற்கே என்று தெரிவித்தனர் .
இதன் மூலம் 10 வயது குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் முதல் நாடு பொலிவியா ஆகும் . இந்த சட்டம் கவலை அளிப்பதாக யு.என் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க போராடி வரும் இந்த நேரத்தில் இது மாதிரியான சட்டம் தேவைதானா ?? வேலை செய்து கொண்டே அவர்களால் கல்வி கற்க முடியுமா ?? அல்லது அவர்களுக்கு வேலை தருபவர்கள் அவர்களை கல்வி கற்க அனுமதிப்பார்களா ??
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.