நாம் வேறு ஊருக்கு செல்கிறோம் என்றால் நமக்கு பிடிக்காதது டோல் பிளாசாவில் காத்திருப்பது , அவர்களுடன் சில்லறைக்கு சண்டை போடுவது என பல பிரச்சனைகள் உள்ளது. இனி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை . வாகன ஒட்டிகளின் நலனுக்காக புதிய முறை வர உள்ளது . அரசு தரும் ஒரு ஸ்மார்ட் கார்டு வாங்கி கொண்டால் போதும். இனி எல்லா டோல் பிளாசக்களையும் கடந்து செல்லலாம். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் தர பட்டு உள்ளது.
இனி ஸ்மார்ட் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு என தனி பாதை உருவாக்கப்பட்டு உள்ளது. அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு கட்டணத்தில் 3 இல் 2 பங்கு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் டோல் பிளாசாக்களில் தேங்கி நிற்கும் கூட்டத்தை கட்டுபடுத்த உதவும்.
ஸ்மார்ட் கார்டு வாங்குங்க டிராவல்ல ஸ்டார்ட் பண்ணுங்க
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.