BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 July 2014

நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர்

கோவில்பட்டி டு மதுரை வழியில் போகும் பஸ்ஸின் ஒட்டுநராக இருப்பவர் சவுந்தராஜன் . இவருக்கு வயது 51 ஆகிறது. வழக்கம் போல் இன்று கோவில்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது பஸ். பஸ் கள்ளிக்குடி அருகே வந்த போது டிரைவருக்கு தீடீர் என்று நெஞ்சு வழி ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்து கொண்ட பஸ் டிரைவர், பஸ்ஸை ஒரமாக நிறுத்தினார். அங்கு இருந்த பயணிகளை வேறு பேருந்தில் ஏற்றி விட்டார் . அதற்கு பின்பு அவர் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலயத்திற்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார்.

டிரைவரின் இந்த செயலை அனைத்து பயணிகளும் பாராட்டினர். அவரின் இந்த விவேகமான் செயலால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.


பல பேரின் உயிரை காப்பாற்றி சரித்திரத்தில் இடம்பிடித்த இவர் சவுந்திரராஜன் மட்டுமல்ல சரித்திரராஜனும் கூட. அவருக்கு நம் சார்பில் ஒரு சல்யூட்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media