முன்பெல்லாம் ரயில் டிக்கெட் புக் பண்ணுவதற்கு கால் வலிக்க வரிசையில் நின்று தான் வாங்க முடியும். இன்றோ காலம் எல்லாம் மாறிவிட்டது . வீட்டில் இருந்த படியே ரயில் டிக்கெட் புக் பண்ண முடிந்தது. அனைவரும் இணையதளத்தை பயன் படுத்தி வருவதால் இதன் மூலம் அதிக டிக்கெட் புக் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதிலும் பிரச்சனை வந்தது .அனைவரும் ஒரே நேரத்தில் இந்த இணையதளத்தை பயன் படுத்தி வந்ததால் இதன் வேகம் குறைந்தது. இதில் நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் டிக்கெட் புக் செய்யப்பட்டது.
இதன் முகவரி www.irctc.co.in.
இந்த பிரச்சனையை போக்குவதற்கு புதிய தலைமுறை இணையதளம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்து உள்ளது. இதில் ஒரே நாளில் 7 இலட்சம் டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம். அந்த இணையதளத்தின் முகவரி www.nget.irctc.co.in.
இணையதளத்தை வேகமாக செயல்படுத்துவது போல் ரயிலையும் கொஞ்சம் வேகமாக போக சொல்லுங்கப்பா.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.