மும்பையில் 2011 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 21 அப்பாவி குடிமக்கள் இறந்தனர் . 141 பேர் காயமடைந்தனர் .
இந்நிலையில் இந்திய முஜாகீதின் இயக்கத்தின் நிறுவனரான யாசின் பத்கல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டான் . நாடு முழுவதும் நடந்த பல்வேறு குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்த தீவிரவாதியை விசாரித்ததில் மும்பை குண்டு வெடிப்பிலும் சம்பந்தப் பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது .
அவன் போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் , " நான் மும்பையில் குண்டு வெடிப்பு நடத்தியதில் வருத்தம் கொள்ளவில்லை , மாறாக குண்டு வெடிப்பை வெற்றிகரமாக நடத்தியதில் பெருமை கொள்கிறேன் . மேலும் தான் நடத்திய இந்த குண்டு வெடிப்பை குற்றமாக கருதவில்லை " என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.