BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 July 2014

சொகுசாக வாழ்ந்த ஷீலா தீட்சித் வீட்டில் 31 ஏசி , 25 ஹீட்டர்கள் !!!



தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்ததில் , டில்லியின் முன்னாள் முதல்வர் ஷிலா தீட்சித் முதல்வராக இருந்த போது வசித்த வீட்டில் 31 ஏசிகள் , 25 ஹீட்டர்கள் , 15 கூலர்கள் , 16 காற்றை சுத்தப்படுத்தும் கருவிகள் இருந்தது தெரிய வந்துள்ளது , இப்போது இந்த வீட்டில் நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தங்கி வருகிறார் .

 ஷீலா தீட்சித் இந்த வீட்டில் குடியேறும் போது எலக்ட்ரிகல் வேலை மட்டும் 16 லட்சம் செலவில் செய்யப்பட்டது . இப்போது இந்த பொருட்கள் எல்லாம் தேவைக்கேற்ப மற்ற அதிகாரிகளின் அலுவலகங்களில் பொறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர் . இப்போது ஷீலா தீட்சித் கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ளார் .

இப்போது மன்மோகன் சிங் குடியேறும் முன் 35 லட்சம் செலவில் வேலை நடந்துள்ளதாக கூறுகின்றனர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media