பேஸ்புக் வாடிக்கையாளர்களிடம் அனுமதி இல்லாமல் உளவியல் சோதனை நடத்தியதற்காக பேஸ்புக் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. இதற்காக பேஸ்புக் 7 இலட்சம் வாடிக்கையாளர்களை தேர்ந்து எடுத்து கொண்டது. அவர்களின் நியூஸ் ஃபிடில் அவர்களுக்கு தெரியாமல் சில மாற்றங்களை செய்தது. அவர்களின் வரும் செய்திகள் ஒன்று நல்ல செய்திகளாக இருக்கும் அல்லது கெட்ட செய்தியாக இருக்கும், அதை பொருத்து அவர்கள் எவ்வாறு பதிவுகளை வெளியிடுகிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்காக ஒரு ஆய்வை நடத்தியது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒருவர் நல்ல செய்தியை படித்தால் அவர்களின் பதிவு நல்லதாக இருந்தது, தீய செய்தியை படித்தால் தீயைவையாக இருந்தது.
செய்திகள் பயனாளிகள் மனநிலயில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிய வந்தது. ஆனால் கணிப்பை அவர்களின் அனுமதி இல்லாமல் ரகசியமாக நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது கடும் எதிர்பை கிளப்பி உள்ளது. இதற்காக பேஸ்புக் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. இது அவர்களின் சேவையை உயர்த்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் தான் நடத்தப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.