பிரேசில் அணி நேற்று காலிறுதியில் கொலம்பியா அணியுடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது . இதன் மூலம் பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மணியை சந்திக்க இருக்கிறது .
பிரேசிலிலின் நட்சத்திர வீரரான நெய்மர் , நேற்றைய போட்டியின் 88 வது நிமிடத்தில் காயம் அடைந்தார் . இவரை பரிசிசோதித்த மருத்துவர்கள் காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும் காயம் முழுமையாக குணமாக சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்தனர் . இதனால் ஜெர்மணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் விளையாட மாட்டார் .
இது பிரேசில் ரசிகர்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஜெர்மணி அணிக்கு எதிரான போட்டியில் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் , நெய்மர் இல்லாமல் விளையாடுவது பிரேசில் அணிக்கு கடும் இழப்பாக இருக்கும் .
இந்த உலக கோப்பையில் பிரேசில் அணியின் முதுகெலும்பாக இருந்த நெய்மர் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.