BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 July 2014

பிரேசில் அணியின் நெய்மர் காயத்தால் அரையிறுதியில் விளையாட மாட்டார் !!



பிரேசில் அணி நேற்று காலிறுதியில் கொலம்பியா அணியுடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது . இதன் மூலம் பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மணியை சந்திக்க இருக்கிறது .

பிரேசிலிலின் நட்சத்திர வீரரான நெய்மர் , நேற்றைய போட்டியின் 88 வது நிமிடத்தில் காயம் அடைந்தார் . இவரை பரிசிசோதித்த மருத்துவர்கள் காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும் காயம் முழுமையாக குணமாக சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்தனர் . இதனால் ஜெர்மணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் விளையாட மாட்டார் .

இது பிரேசில் ரசிகர்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஜெர்மணி அணிக்கு எதிரான போட்டியில் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் , நெய்மர் இல்லாமல் விளையாடுவது பிரேசில் அணிக்கு கடும் இழப்பாக இருக்கும் .

இந்த உலக கோப்பையில் பிரேசில் அணியின் முதுகெலும்பாக இருந்த நெய்மர் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ளார் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media