இனிமேல் ராஜஸ்தான் மாநிலத்தில் தாமதமாக சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ க்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் விதிக்குமாறு உத்தரவு பிறப்பித்து உள்ளார் அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா. அங்கே பாஜக வின் ஆட்சி நடைபெறுகிறது. சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்கள் லேட்டாக வருவது நாளுக்கு நாள் இருந்து கொண்டே இருந்தது. அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ .க்கள் லேட்டாக வந்து கொண்டு இருந்தார்கள். இதற்கு முடிவு கட்ட நினைத்த முதல்வர் இனி லேட்டாக வந்தால் 500 ரூபாய் ஃபைன் என்றார். இந்த உத்தரவுக்கு பிறகும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு 15 பேர் தாமதமாக வந்தனர் , அவர்களிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
500 ரூபாய் என்பது அவர்களுக்கு சாதாரண பணம் தான், ஆனால் அதனை அவர்கள் அபராதமாக கட்டும் போது மக்களிடம் அவர்களது நற்பெயருக்கு தீமை விளைவிக்கும். எனவே முதல்வரின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது தான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.