டெல்லி திகார் சிறை சார்பில் ஏசி உணவகத்தை அமைக்க உள்ளார்கள். இந்த உணவகத்தில் சமைக்கும் மற்றும் பரிமாறும் வேலையை அந்த சிறை கைதிகள் செய்வார்கள். இதற்காக அவர்களுக்கு ஒட்டல் மேலாண்மை பயிற்சி வழங்கப்படுகிறது. இது டெல்லியில் உள்ள ஜெயில் ரோட்டில் இந்த உணவகம் செயல்ப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக இதனை தொடங்கவில்லை. அங்கு உள்ள கைதிகளுக்கு ஒரு மாத காலமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக கொடிய குற்றம் புரியாத கைதிகளை தேர்வு செய்து உள்ளார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளவர்களை இந்த வேலைக்கு தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களது தண்டனை காலம் 12 வருடங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
இப்போது இந்த உணவகம் டெல்லிவாசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இங்கு தயாரிக்கப்படூம் உணவு நல்ல தரமானவையாக இருக்கும். இங்கு ஒரே நேரத்தில் 50 பேர் சாப்பிடலாம். காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை உள்ளது.
தரமான உணவுகளை நியாயமான விலையில் வழங்குவதே இவர்களது நோக்கம் ஆகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.