தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவச சிம் கார்டு வழங்கப்பட உள்ளது. எஸ்பி,டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர்,எஸ்ஐ ஆகியோர் தகவல்களை பரிமாறி கொள்ள அவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்ஐ க்கு கீழ் பணிபுரியும் காவலர்கள் தகவல்களை பரிமாறி கொள்ள அவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அவர்களுக்கு பி.எஸ்.என்.எல். சிம் வழங்கப்பட உள்ளது. இது அவர்களின் வேலைக்கு உதவியாக இருக்கும். இதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என கூறப்பட்டு உள்ளது.
இதன் மூலம் குற்றங்களை விரைவில் கண்டுபிடிக்கவும், அனைத்து காவல் நிலையங்களையும் ஒருங்கிணைக்கவும் பயன்படும்.அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு காவலருக்கும் 7 சிம் கார்டுகள் தரப்பட உள்ளது. இதனை அவர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அதற்கான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும்.
இந்த திட்டம் காவலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.