நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து இப்போது தான் தேமுதிக கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. மீண்டும் மக்களிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பெறுவதற்கு அந்த கட்சி முயற்சி செய்து வருகிறது. அடுத்து தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பது குறித்து அந்த கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் 2 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினார் கேப்டன். அதில் சட்டசபையில் துறை வாரியான கூட்டத்தில் தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் பேச்சு அதிமுக அமைச்சர்களை திணறடிக்க வேண்டும்.
இதன் மூலம் அதிமுக மீது மக்கள் நம்பிக்கை குறையலாம் ,அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கேப்டன் திட்டம் வைத்து உள்ளார். அது மட்டுமில்லாமல் சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்கும் கேள்விகள் புள்ளி விவரங்களோடு இருக்க வேண்டும் என்று கூறி அதற்கு உதவியும் செய்து வருகிறார்.
ஆனால் மக்களிடையே அந்த கட்சி நல்ல பேரை பெற வேண்டுமானால் கேப்டனும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். எதிர்கட்சி தலைவராக அவருக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் எதிர்கட்சி தலைவர்களாக இருந்த போது சட்டசபைக்கு போவது இல்லை என்று கேப்டன் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இப்போது அவரும் அதே தவறை தான் செய்து வருகிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.