BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 July 2014

இன்னும் 75 நாளில் மங்கல்யான் செவ்வாய் கிரகத்தைச் சென்று அடையும் !!


சனிக்கிழமையில் இருந்து 75 நாளில் மங்கல்யான் செவ்வாய் கிரகத்தைச் சென்று அடையும் ...

மங்கல்யான் தனது செவ்வாய் கிரகத்தை நோக்கிய 680 மில்லியன் கீ.மீ பயணத்தை தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது . இந்த பயணத்தில் 525 மில்லியன் கீ.மீ இதுவரை கடந்துள்ளது . இந்த விண்கலம் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த விண்களம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தைச் சென்று அடைந்தால் , செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாடுகள் என்னும் மதிப்புமிக்க பட்டியலில் இந்தியாவுக்கு ஒரு இடம் கிடைக்கும் . இதுவரை அமெரிக்கா , ரஷ்யா , ஐரோப்பிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்களம் அனுப்பியுள்ளது .

இந்த விண்கலத்தை வடிவமைக்க 450 கோடி ஆனது . இது நாசாவின் விண்கலத்தைக் காட்டிலும் ஆறு மடங்கு குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media