BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 11 July 2014

தென்னிந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபி தாயானார்

தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தை என்னும் பெருமையை பெற்றவர் கமலா ரத்தினம். பெண்களுக்கான சிறப்பு மருத்துவரான கமலா செல்வராஜ் என்பவர் 1990 ஆம் ஆண்டு குழந்தையில்லாமல் கஷ்டப்பட்ட ஒருவரை செயற்கை முறையில் கரித்தரிக்க செய்தார். அந்த முறையில் உருவான இவர் , சாதாரண பெண்களை போல் வளர்ந்தார். அவருக்கு திருமணமும் நடந்தது. அவரும் கருவுற்றார். அவருக்கு இப்போது குழந்தையும் பிறந்து உள்ளது.



இவர் தனது 24 வது வயதில் 2.8கிலோ எடை உள்ள அழகிய பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். இந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இந்த குழந்தைக்கும் அதே மருத்துவரான கமலா செல்வராஜே பிரசவம் பார்த்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media