உலக அழகி ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடித்து கொண்டு இருந்த போது தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்து இருந்தார். பின்பு இவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் , நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்காமல் ஒரு சில விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்தார். 5 வருட இடைவேளிக்கு பிறகு மீண்டும் அவர் நடிக்க வருகிறார்.
இவர் சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா என்னும் படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இதில் நாயகனாக ஜான் ஆப்ரகாம் நடிக்க உள்ளார். இது கேங்ஸ்டர் பற்றிய கதை ஆகும். அதனால் ஐஸ்வர்யா ராய் கிளாமர் வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்காக 8 கிலோ எடையை குறைக்க உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவர உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.