BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 31 August 2014

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம் அறிவுரை ..!


ஆசிரியர்கள் தங்கள் பணியை நேசிக்க வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தினார். இதுகுறித்து, லூதியானாவில் உள்ள சத்ய பாரதி பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட அப்துல் கலாம் பேசியதாவது:- 



”வாழ்க்கை என்ற கடலில் வழிதெரியாமல் நிற்கும் மாணவர்களை நெறிப்படுத்தி அவர்களுக்கு தகுந்த பாதையை காட்டும் கலங்கரை விளக்கமாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும். மாணவர்களை நாட்டுக்காக சேவை செய்ய ஊக்கப்படுத்த ஆசிரியர்களின் வாழ்க்கையையே ஒரு வாழும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாணவனை அனைத்து துறைகளிலும் வெற்றி பெற செய்யவேண்டும் என்றால் அதற்கு ஆசிரியர்கள்  முன்மாதிரியாக இருக்க வேண்டும்.” என்றார். 

இதற்காக, 11 விதிகள் கொண்ட உறுதிமொழியையும் ஆசிரியர்களுக்கு கலாம் அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, பணியை நேசித்தல், இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளித்தல் போன்றவை அதில் இடம்பெற்றது. ஆசிரியர்களிடம் உரையாற்றிய பிறகு அப்துல் கலாம் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு, மாணவர்களின் படைப்புகளை கொண்டு நடத்தப்பட்ட கண்காட்சியையும் பார்வையிட்டார். 



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media