70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் பாஜக 31 தொகுதிகளிளும், தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி 28 தொகுதிகளிளும் வெற்றி பெற்றது. கடந்த மூன்று முறையாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் ஆனார். ஆனால் இந்த ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்த ஒத்துழைப்பு இல்லாததால், அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பிறகு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்நிலையில் முடிந்த லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ் ஒரு பேட்டி தந்துள்ளார். அதில் பாஜக கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் அவரை முதல்வராக்குவதாகவும் , அதற்காக அவர் ஆத் ஆத்மி கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ. க்களுடன் பாஜக வில் இணைந்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த பாஜக எம்.பி.யின் பெயரை அவர் சொல்லவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.