BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 31 August 2014

கத்தி படத்துக்கு வந்து இருக்கும் புதிய பிரச்சனை, தீபாவளிக்கு வெளிவருமா ??




இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் கத்தி. இந்த படத்தை துப்பாக்கி படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.  இந்த படம் தொடங்கியதில் இருந்தே இதற்கு பிரச்சனையாக தான் இருக்கிறது. முதலில் இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தமிழர்களை கொன்று குவித்த கொலைவெறி கொடூரன் ராஜபக்ஷேவுக்கு நெருங்கியவரின் நிறுவனம். அப்படிப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் படத்தை எப்படி தமிழில் அனுமதிக்கலாம், எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என மாணவர் அமைப்பு முதல் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளன என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் படம் வெளிவருவதற்கு முன் இது குறித்து எதுவும் சொல்ல முடியாது என நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.

இந்நிலையில் படத்துக்கு புதிய பிரச்சனை வந்துள்ளது. கத்தி படத்தின் கதை தன்னுடையது என மிச்சூர் கோபி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கத்தி படத்தின் இரண்டரை மணி நேர கதை தான் முருகதாஸிடம் கூறியதாகவும், அவருக்கு கதை பிடித்து போக முருகதாஸ் கம்பெனியில் அதனை இயக்கி விடலாம் என கூறியுள்ளார். அதற்காக கதையை சிறிது மாற்ற சொல்லியுள்ளார். அதற்காகவே கோபி ஒன்றரை வருடம் செலவிட்டுள்ளார். ஆனால் இப்போது கோபியை ஏமாற்றி விட்டு முருகதாஸ் அந்த கதையை திருடியுள்ளார் என்று கோபி நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளார். அவருக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடி வருகிறார்.

நீதிபதி இருதரப்பினரையும் தங்கள் கதையை சமர்பிக்க சொல்லியுள்ளார். கோபி தரப்பு சமர்ப்பித்து விட்டது. ஆனால் முருகதாஸ் தரப்பு இன்னும் சமர்பிக்கவில்லை. ஏனென்றால் கதையை நீதிமன்றத்தில் சமர்பித்தால் படத்தின் கதை லீக் ஆகிவிடும். இது படத்தின் வெற்றியை பாதிக்கும் என பயப்படுகிறார். ஏற்கனவே பல பிரச்சனைகள் உள்ள நிலையில் இந்த புதிய பிரச்சனையால் , கத்தி படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார்கள்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media