BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 3 September 2014

பணத்திற்காக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் - கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாஸ்சின் கண்ணீர் பேட்டி

த‌னக்கு பண நெருக்கடி ஏற்பட்டது, சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது, பணம் என்னிடம் இல்லை, எனக்கு வேறு வழியின்றி எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன, அந்நிலையில் விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் சிலர் தள்ளிவிட்டனர் என்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாஸ் கண்ணீர் விட்டு கதறினார்.

ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்திய விபசார வேட்டையில் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். ஓட்டலில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் வந்ததாகவும், அதன் பேரில் அங்கு சோதனை நடத்தியபோது தொழில் அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகையை கையும் களவுமாக பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நடிகை யார் என்பதை வெளியிடாமல் இருந்தனர்.

தற்போது விபசாரத்தில் கைதான நடிகை ஸ்வேதா பாசு என தெலுங்கு இணையதளங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் பட உலகில் அறிமுகமான ஸ்வேதாபாசு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளார். தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்துள்ள சுவேதா,தமிழில் ராரா, ரகளை, சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் விபாசர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வேதா பாஸ் வுடன் விபசார புரோக்கர் பாலுவும் கைதானார்.

கைதான ஸ்வேதா பாஸ், பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபசாரத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி கோர்ட்டில் ஸ்வேதா பாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஸ்வேதா பாஸ், சினிமா வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. தவறான படங்களை தேர்வு செய்து நடித்தேன் இதனால் எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது மேலும் சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது. என்னிடம் இல்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை. விடுபடவும் முடியவில்லை. என் பிரச்சினை யாருக்கும் புரியவில்லை. என்னைபோல் பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஸ்வேதாவை பாஸை போல பல நடிகைகள் பணத்திற்காக விபசார படுகுழியில் உற்றார் உறவினர்களா தள்ளப்படுவது வாடிக்கையாகவே உள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media