BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 3 September 2014

செக்ஸ் வேண்டாம், ஃபேஸ்புக் போதும் என கூறும் பெண்கள், அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்


பெண்களுக்கு செக்ஸ் உறவு கொள்வதை விட ஃபேஸ்புக்கில் ப்ரவுஸ் செய்வது தான் மிகவும்  பிடித்திருக்கிறதாம். இது குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

1020 பெண்களிடம் இதுதொடர்பாக இந்த ஆய்வு செய்த நிறுவனம் கருத்துக் கேட்டபோது 57 சதவீதம் பேர் செக்ஸை விட ஃபேஸ்புக்கில் உலவுவது தான் தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

15 நாட்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள கூடாது என்று சொல்வதை விட 15 நாட்களுக்கு இண்டெர்நெட் பக்கமே போகக் கூடாது என்று யாராவது சொன்னால், தங்களுக்கு பயங்கர கோபம் வரும் என்றும், ஃபேஸ்புக்குக்காக செக்ஸை தியாகம் செய்யக் தயார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் செக்ஸில் ஈடுபடுவதை விட ஃபேஸ்புக்கில் சேட்டிங்கில்தான் தங்களது காதலர்கள், நண்பர்களோடு அதிக நேரம் பேசுகின்றனர். செக்ஸ் விஷயங்களை நேரில் அனுபவிப்பதை விட சாட்டிங்கில் அதிக நேரம் பேசி அதை அனுபவிக்கின்றனராம்.

மேலும் 2 சதவீதம் பெண்கள், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றை பார்கக் கூடாது என்று தங்களது கணவர்கள்/காதலர்கள்  கூறியதற்காக அவர்கள் உறவே வேண்டாமென்று பிரிந்து வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

2 சதவீதம் பேர் பேஸ்புக், டிவிட்டர் மூலம் தங்களது காதலர்களுக்கு செக்ஸியான மெசேஜ் அனுப்புவதாக கூறியுள்ளனர்.
பாய் பிரண்ட், கணவர் அல்லது அறிமுகம் இல்லாத ஆண்களோடு செக்ஸியாக பேச ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதாக 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media