சில நாட்களுக்கு முன் தான் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலே தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது, இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் அமெரிக்காவின் மற்றொரு பத்திரிகையாளர் ஸ்டீவன் சாட்லாஃப் என்பவரின் தலையை கொய்து கொன்றுள்ளது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு
“A second message to America” என்று பெயரிட்டு இந்த வீடியோவை அனுப்பிய தீவிரவாத அமைப்பு இராக் பிரச்சினையில் அமெரிக்க தலையிட்டதை கண்டிக்கும் வகையில் ஸ்டீவன் சாட்லாஃப் தலை கொய்யப்படுவதாக கூறுப்பட்டுள்ளது. 'இவரது தலை, இராக் பிரச்சினையில் அமெரிக்க தலையீட்டிற்கான விலை' என்கிறது அந்த தீவிரவாதியின் பேச்சு. மேலும் தாங்கள் பிணைக்கைதியாக வைத்திருக்கும் பிரிட்டன் பத்திரிக்கையாளர் டேவிட் ஹெய்ன்ஸ்சையும் கொலை செய்யப்போவதாக தீவிரவாதிகள் அச்சுறுத்தியுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.