சிரியாவில் உள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.)
பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக
அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து, தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில், இராக் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்தது. ஆனால், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது நேரடித் தாக்குதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவாக உள்ளார்.
சிரியாவில் உள்ள ஐ.எஸ். மீது எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்ற விவரத்தை இப்போது வெளியிட முடியாது. தாக்குதலுக்கு முன்பாக, எந்த மாதிரியான வியூகங்கள் தேவைப்படும் என்பதையும் தெரிவிக்க முடியாது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் பயங்கரவாதிகளை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களின் முயற்சிகளுக்கு சர்வதேச அளவிலான ஆதரவைத் திரட்டி வருகிறோம்.
எங்களுடைய முயற்சிக்கு நாற்பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
இராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக எங்களுடன் இணைந்து, பிரான்ஸ் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோன்று, அந்தப் பகுதியில் உள்ள வேறு சில நாடுகள், சிரியா மீதான தாக்குதலுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளன. அந்தத் தாக்குதல் ஒரே தலைமையின் கீழ், ஒருங்கிணைந்த சர்வதேச அணியின் தாக்குதலாக இருக்கும். எங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ள வேறு நாடுகளையும் வரவேற்கிறோம் என்று சூசன் ரைஸ் கூறினார்.
இது குறித்து, தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில், இராக் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்தது. ஆனால், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது நேரடித் தாக்குதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவாக உள்ளார்.
சிரியாவில் உள்ள ஐ.எஸ். மீது எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்ற விவரத்தை இப்போது வெளியிட முடியாது. தாக்குதலுக்கு முன்பாக, எந்த மாதிரியான வியூகங்கள் தேவைப்படும் என்பதையும் தெரிவிக்க முடியாது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் பயங்கரவாதிகளை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களின் முயற்சிகளுக்கு சர்வதேச அளவிலான ஆதரவைத் திரட்டி வருகிறோம்.
எங்களுடைய முயற்சிக்கு நாற்பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
இராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக எங்களுடன் இணைந்து, பிரான்ஸ் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோன்று, அந்தப் பகுதியில் உள்ள வேறு சில நாடுகள், சிரியா மீதான தாக்குதலுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளன. அந்தத் தாக்குதல் ஒரே தலைமையின் கீழ், ஒருங்கிணைந்த சர்வதேச அணியின் தாக்குதலாக இருக்கும். எங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ள வேறு நாடுகளையும் வரவேற்கிறோம் என்று சூசன் ரைஸ் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.