ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட
வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
செப்டம்பர் 5-ல், முன்னாள் ஜனாதிபதி,
டாக்டர் சர்வபள்ளி
ராதாகிருஷ்ணனின், 126-வது பிறந்த நாள் விழா
கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை, இனிமேல், 'குரு உத்சவ் 2014' என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்றும், விழாவையொட்டி, மாணவர்களிடையே, 23 மொழிகளில் கட்டுரை எழுதும்
போட்டியை நடத்த வேண்டும் என்றும், அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தினம் குரு
உத்சவ் என்று மாற்றப்படுவதற்கு என்ன காரணம் அதற்க்கான அவசியம் என்ன என்று பார்க்கும்
நேரத்தில் இதில் மறைந்து இருப்பது ஒரே ஒரு செய்தி தான் அது இந்தி திணிப்பு தவிர வேறில்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.