நடிகர் ஆர்யா அவருடைய தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'அமர காவியம்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இருக்கிறார். இதில், மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் பீரிமியர் ஷோ எஸ்கேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவின் ஹீரோ ஹீரோயினாக இருந்தது சிம்புவும் நயன்தாராவும் தான்.
இவர்கள் இருவரும் இந்த விழாவுக்கு ஜோடியாக வந்தார்கள். இவர்களை பார்ப்பதற்கு கூட்டம் அதிகமாக வந்தது. நயன்தாராவை அரவணைத்து சிம்பு அழைத்து சென்றார். இவர்கள் இருவரும் இதற்கு முன் காதலித்து அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.