இயக்குனர் லிங்குசாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மொத்த வித்தையையும் அஞ்சான் படத்தில் இறக்கி இருப்பதாக ஒரு பேட்டி அளீத்தார். ஆனால் அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதனால் லிங்குசாமியின் மொத்த வித்தையை எல்லாரும் கலாய்த்து வருகிறார்கள். பேஸ்புக்கில் அவரை கலாய்த்து பல பக்கங்கள் தொடங்கப்பட்டு விட்டது. தினமும் அவரை கலாய்த்து பல ட்ரோல்கள் வந்து கொண்டே இருக்கிறது. லிங்குசாமிக்கு ஆதரவாக யாரும் பேசாத நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு லிங்குசாமிக்கு ஆதரவாக உள்ளார்.
படம் இயக்குவது என்பது சாதாரண செயல் அல்ல. அது மிக கடினமான வேலை. அது சில சமயம் வெற்றி பெறும், சில சமயம் தோல்வியடையும். அதற்காக இயக்குனரை கலாய்ப்பது என்பது தவறான செயல். நீங்கள் நல்ல ரசிகராக இருந்தால் தங்கமீன்கள் படத்தை வெற்றி படமாக்கி இருக்க வேண்டும் அதனை நீங்கள் செய்யவில்லை. நாங்கள் உங்களை கலாய்க்க ஆரம்பித்தால் நீங்கள் என்ன ஆவிர்கள் என யோசித்து பாருங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.