ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணி இந்த வாரம் மீண்டும் தொடங்குகிறது. விமானத்தைத் தேடும் பணியில் இரண்டு கப்பல்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
இதில் ஜிஓ ஃபீனிக்ஸ் கப்பலானது மேற்கு ஆஸ்திரேலியப் பெருங்கடல் பகுதியில்
இருந்து விமானம் விழுந்ததாகக் கருதப்படும் முக்கிய இடத்துக்கு புதன்கிழமை
வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கப்பல் 20 நாள்கள்
தேடும் பணியில் ஈடுபடுத்தப்படும். இதனுடன், ஃபூயுக்ரோ டிஸ்கவரி எனும்
கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
இது தவிர, ஃபூயுக்ரோ ஈக்வேட்டர் எனும் மற்றொரு ஆய்வுக் கப்பலும் அக்டோபர் மாத இறுதியில் விமான பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்ற எம்எச்370 விமானம் நடுவானில் திடீரென்று காணாமல் போனது. அந்த விமானத்தில் 239 பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, ஃபூயுக்ரோ ஈக்வேட்டர் எனும் மற்றொரு ஆய்வுக் கப்பலும் அக்டோபர் மாத இறுதியில் விமான பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்ற எம்எச்370 விமானம் நடுவானில் திடீரென்று காணாமல் போனது. அந்த விமானத்தில் 239 பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.