கடந்த சனிக்கிழமை அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதனை எதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவியேற்கும் போது, கண்ணீர் விட்டு அழுது கொண்டே பதவி ஏற்றார். இப்போது அவர் தனது முதல் வாழ்த்து செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். அது சரஸ்வதி பூஜை, விஜய் தசமிக்கான வாழ்த்தாகும். வாழ்த்தோடு நிறுத்தி கொள்ளாமால் ஜெயலலிதாவை போல் புது திட்டங்களை அறிமுக படுத்த வேண்டியது அவருடைய கடமையாகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.