நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்றது. அதன் தீர்ப்பு கடந்த சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 2 ஆண்டுகளாக குறைப்பதற்கு ஜெயலலிதா தரப்பில் கடுமையாக முயற்சி செய்தார்கள். ஆனால் எந்த பலனும் இல்லை. நீதிபதி தனது தீர்ப்பை மாத்துவதாக இல்லை. நீதிபதி தீர்ப்பை கூறிய பின் ஜெயலலிதா என்ன கூறினார் என்பதை பார்ப்போம்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, அந்த காலத்திலேயே திரைப்படங்களில் நடிக்க பல கோடிகளை சம்பளமாகப் பெற்றவர். எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எந்த குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள் தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே. மக்கள் மன்றத்தில் என்னை சந்தித்து பகை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள், இந்த வழக்கு மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். என் மீது எந்த தவறும் இல்லை. நாம் ஒரு நிரபராதி என்பதை நிருபித்து கட்டாயம் வெளியில் வருவேன் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.