ஆம் ஆத்மி கட்சியின் மஹாராஷ்டிர மாநில பொறுப்பாளரான அஞ்சலி டமானியா மற்றும் மாநில பொருளாளர் இன்று இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர் .இருவரும் தங்களின் சொந்த காரணங்களை கூறி கட்சியை விட்டு விலகினர் .
இது குறித்து அஞ்சலி கூறுகையில் , " நான் மாநில பொறுப்பாளராக என்னுடைய பதவியை விட்டு விலகுகிறேன் . நான் எப்போதும் கூறுவது போல என்னுடைய மனதும் இதயமும் எப்போதும் ஆம் ஆத்மி உடன் தான் இணைந்து இருக்கும் . மாநில பொறுப்பாளருக்கு வேலைகள் அதிகம் . நான் என்னால் முடிந்த வரை சில வேலைகளை பார்த்தேன் . ஆனால் நானும் பிரித்தியும் சில சொந்த காரணங்களால் பதவியை விட்டு விலகுகிறோம் " என்றார் .
இதேப் போன்று பிரித்தி ஷர்மாவும் தான் தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறினார் .
ஆம் ஆத்மி ஏற்கனவே மஹாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து இருந்தது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.