திமுக தலைவர் கருணாநிதி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை அபாண்டம் என கூறி நிராகரித்த அழகிரி, "தலைவர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். நாங்கள் எல்லாம் இறந்த பின் தான், அவர் இந்த உலகத்தை விட்டு போக வேண்டும். எங்கள் பிணத்தின் மீது தான் அவரது கண்ணீர் விழ வேண்டும்" என்று ஆவேசமாக பேசி தனது பேட்டியை நேற்று மாலை முடித்தார்.
பேட்டியை முடித்து விட்டு, வீட்டிற்குள் சென்ற அழகிரி, கண்ணீர் வடித்துள்ளார். அவரது மனைவி காந்தியும், மகன் துரை தயாநிதியும் அழகிரியை அணைத்தபடி, ஆறுதல் கூறி, தேற்றி உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். அழகிரி அழுததை பார்த்த அவரது குடும்பத்தினர், சோகமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.உள்ளே சென்ற பிறகும், அழகிரி சோகத்தில் மூழ்கி இருந்து, எதுவும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் கழித்த பிறகே, வெளியே வந்து, தன்னை காண வந்த ஆதரவாளர்களை சந்தித்து விட்டு, மறுபடியும் வீட்டிற்குள் சென்று விட்டார்.
பேட்டியை முடித்து விட்டு, வீட்டிற்குள் சென்ற அழகிரி, கண்ணீர் வடித்துள்ளார். அவரது மனைவி காந்தியும், மகன் துரை தயாநிதியும் அழகிரியை அணைத்தபடி, ஆறுதல் கூறி, தேற்றி உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். அழகிரி அழுததை பார்த்த அவரது குடும்பத்தினர், சோகமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.உள்ளே சென்ற பிறகும், அழகிரி சோகத்தில் மூழ்கி இருந்து, எதுவும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் கழித்த பிறகே, வெளியே வந்து, தன்னை காண வந்த ஆதரவாளர்களை சந்தித்து விட்டு, மறுபடியும் வீட்டிற்குள் சென்று விட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.