BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 29 January 2014

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட இருக்கிறாரா?

மு.க. அழகிரியை நிரந்தரமாக நீக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அழகிரிக்கு,  'உங்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது?' என்பதற்கான விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பும் திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, அழகிரியை திமுகவில் இருந்து, தற்காலிகமாக நீக்குவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர்  அன்பழகன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி, அழகிரி தன்னிடம் தகாத வார்த்தைகளை கூறிவிட்டு, ஸ்டாலின் இன்னும் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று கூறியதாக உருக்கமாக பேட்டி அளித்தார். இதனைத் தொடர்ந்து அழகிரியை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுகவினர் சில இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கட்சியை விட்டே அழகிரியை நிரந்தரமாக நீக்கும் முடிவிற்கு திமுக வந்ததாக தெரிகிறது.  இதனால் "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஏன் உங்களை கட்சியைவிட்டு நீக்கக் கூடாது?" என விளக்கம் கேட்டு திமுக தலைமை  அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media