முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு 1998ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனு, 2011ல் தான், அப்பொழுது இருந்த குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலால் நிராகரிக்கப்பட்டது.
கால தாமதமாக கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் தங்கள் தண்டனையை குறைக்குமாறு அந்த 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
சமீபத்தில், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 15 பேரின் மரண தண்டனையை, அவர்களின் கருணை மனுக்கள் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதே போன்று முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.