அழகிரி ஆதரவாளர்கள், அவரின் பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாட தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மதுரையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அணிவகுத்து வந்து அழகிரிக்கு 63–வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, 1000–க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 20 ஆயிரம் தொண்டர்கள் வருவார்கள் என்று ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை நகரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை சத்ய சாய் நகரில் உள்ள அவரது வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பிறந்தநாள் விழா நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்திலும் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அந்த மன்றத்தில் தான் காலை 9 மணிக்கு மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் பிறகு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கின்றன.
பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு, அதற்கு மறுநாள், அழகிரி பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மதுரை சத்ய சாய் நகரில் உள்ள அவரது வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பிறந்தநாள் விழா நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்திலும் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அந்த மன்றத்தில் தான் காலை 9 மணிக்கு மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் பிறகு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கின்றன.
பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு, அதற்கு மறுநாள், அழகிரி பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.