BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 29 January 2014

மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம் - அழகிரி மீது பயம்?



திமுக தலைவர் கருணாநிதி நடத்திய குடும்ப அரசியல், தற்போது குடும்பத்துக்குள்ளேயே அரசியல் நடத்தும் நிலைக்கு கொண்டு போய் விட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் இன்னும் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று அழகிரி கருணாநிதியிடம் கூறி சண்டையிட்டதாக கருணாநிதி அழகிரி மீது குற்றம் சாட்டியிருந்தார், இதையடுத்து மு.க.அழகிரி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார், இதையடுத்து மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரியின் கொடும்பாவியை சென்னையிலும் சேலத்திலும் எரித்தனர், மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் கொடும்பாவியை எரித்தனர்.

இந்நிலையில் ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஏற்கனவே மு.க.ஸ்டாலினுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமான்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலினுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கோரி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

# வாக்கிங் போக வேண்டாம்னு சொல்லியிருப்பாரோ?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media