BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 29 January 2014

கருணாநிதி நாடகத்திற்கு எல்லாம் தே.மு.தி.க அடி பணியாது

உளுந்தூர்பேட்டை அருகே தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டுப் பணிகளை அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதி நடத்தும் குடும்ப நாடகத்தை நாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் திமுக தலைவர் ஒரு மூத்த அரசியல்வாதி, மிகப் பெரிய தலைவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர், அவர் தன் வீட்டுக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசுகிறார். அதற்கு அவரது மகனும் ஊடகங்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு குடும்பத்தின் டிராமா வெட்ட வெளிச்சமாக தமிழக மக்களுக்கு தெரிந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் அனுதாபத்தை பெற வேண்டும், யாரையாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது அவர்களின் எண்ணமா? ஆனால் எந்தவித டிராமாவுக்கும் தே.மு.தி.க. அடி பணியாது. எல்லா டிராமாவையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். இதற்கான முடிவு என்ன என்பதை வரும் 2ம் தேதி நடக்கும் மாநாட்டில் மக்கள் முன்பு அவர் தெரிவிப்பார் என்றார் பிரேமலதா.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media