BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

இன்டர்நெட் வணிகம் 2020க்குள் 76 பில்லியன் டாலராக உயரும் !!

நம்முடைய ஆரம்ப கால வணிகம் பணம் இல்லாத காலத்தில் தேவையான பொருள்களை பெற்று கொண்டு அவர்களுக்கு தேவையான பொருள்களை கொடுப்பதுமாக இருந்தது .பிறகு சாலை ஒரம் இருக்கும் சிறு வணிகர்களிடம் பணத்தை கொடுத்து வாங்கி கொண்டோம் .பிறகு சூப்பர் மார்க்கெட்டுகள் ,மால்கள் என அந்நிய முதலிடுகள் உள்ளே வர, அவர்களிடம் இருந்து வாங்கி கொண்டோம் .


இன்று இது இன்டர்நெட் வணிகமாக மாறி வருகிறது .வீட்டில் இருந்தபடியே நமக்கு தேவையான அனைத்து பொருள்களையும் இன்டர்நெட் மூலம் பெற்று விடலாம் .இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 1.62 பில்லியன் அமெரிக்க டாலர் வணிகம் நடக்கிறது .இது இந்த ஆண்டுக்குள் 3 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்கபடுகிறது .2020 க்குள் 76 பில்லியன் டாலராக உயரும் .


இதற்காக பல நிறுவனங்கள் உள்ளன, அவற்றுள் முன்னணியில் இருப்பது ப்ளிப்கார்ட் நிறுவனம் .18 மில்லியன் பதிவு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர் .இப்படியே சென்றால் நம் உள்ளூர் வணிகர்களின் நிலை என்னாகுமோ என்று நினைத்தால் ,இதனை எழுதி கொண்டு இருக்கும் போதே கண்களில் இருந்து ஒரு  சொட்டு கண்ணீர் வந்து விழுந்து வணிகம் என்னும் வார்த்தையை அழிய செய்தது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media