BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

மு.க அழகிரி நில அபகரிப்பு செய்ததாக குற்றச்சாட்டு !!


மதுரையில் மு.க அழகிரி அவர்கள் புதிதாக பொறியியல் கல்லூரி ஒன்றை கட்டியுள்ளார் . அந்த கல்லூரி கட்டிய இடம் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது .

அந்த மனுவில் கூறியுள்ளதாவது , " சிவரக்கோட்டையில் மு.க.அழகிரி, கல்வி அறக்கட்டளை மூலம் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டியுள்ளார். 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கல்லூரிக்கு பல்வேறு முறைகேடுகள் மூலம் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன . அதில் ஒரு பகுதியாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான 44 செண்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மு.க.அழகிரி 2011 ஆம் ஆண்டு கிரைய பத்திரம் போட்டுள்ளார். அரசு நிலத்தை ஆக்கிரமித்தது குற்றச்செயலாகும் " என மனுவில் பூகார் கொடுத்துள்ளனர் . 

இந்த மனுவைக் கொடுத்தவர் மதுரை சிவர்க்கோட்டையைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவரான ராமலிங்கம் என்பவர் . இவர்தான் பாசனக் கால்வாயை ஆக்கிரமித்ததாக மு.க.அழகிரி மீது இதற்கு முன்னாடியே பூகார் கொடுத்துள்ளார் . 




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media