BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

உயருகிறது சிகரெட் விலை : குறையுமா பயன்பாடு !!

நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர் ஜூலை 7 தொடங்கி ஆகஸ்ட் 25 வரை நடைபெறுகிறது .ஜூலை 11 ஆம் தேதி அன்று மோடி அரசின் முதல் நிதி பட்ஜெட் தாக்கல் செய்யபடுகிறது .அதில் தாக்கல் செய்வதற்கான சிலவற்றை நிதி அமைச்சகத்திற்கு சுகாதார அமைச்சகம் சில பரிந்துரைகளை செய்து உள்ளது .

அதில் முக்கியமான பரிந்துரை சிகரெட் விலையை உயர்த்துவது .ஒரு சிகரெட்டின் விலையை ரூ.3.50 வரை உயர்த்த திட்டமிட்டு உள்ளார்கள் .அது மட்டுமல்லாமல் 20 லட்சத்திற்கு குறைவான பீடிகள் தயாரிப்போருக்கு  வரி விலக்கை திரும்ப பெறுவது ஆகும் .இதனால் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையும் என்பது அவர்களது எண்ணம் ஆகும் .புகையிலை பொருட்களுக்கு பலர் அடிமையாகி வருகிறார்கள் ,இதனால் நோய்களும் பரவி வருகின்றன .

முக்கிய குற்றமாக  சிறுவர்களும் இளைஞர்களும் இதற்கு அடிமையாக மாறி வருகிறார்கள் .எனவே புகையிலை பொருட்களை தடுக்க அரசு இந்த நடவடிக்கையில் இறங்கலாம் .ஆனால் இது நிரந்திர தீர்வு அல்ல ,அதனை தடுப்பதற்கான முதல் படியில் ஏற காத்து கொண்டு இருக்கிறார்கள் .

இந்த முயர்சி நல்லது தான் என்றாலும் அந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலையைக் கொடுக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media