சமூக வலைதளங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது டிவிட்டரும் ,பேஸ்புக்கும் தான். இதில் அதிக நபர்கள் பயன்படுத்துவது பேஸ்புக்கை தான், ஆனால் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்துவது டிவிட்டரை தான். நமது நாட்டு மோடியில் இருந்து ஷகிரா வரை பிரபலங்கள் தங்கள் கருத்துகளை சொல்ல அதிகம் பயன்படுத்துவது டிவிட்டரை தான். இந்த டிவிட்டரை வாங்க பேஸ்புக் முன்வந்தது என்னும் அதிர்ச்சிக்குள்ளான தகவல் வெளிவந்து உள்ளது. பேஸ்புக் நிறுவனம் இப்போது தான் வாட்ஸ் அப்பை வாங்கியது.
டிவிட்டரை வாங்குவதற்காக அதன் உரிமையாளர்களை அணுகி உள்ளார் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் . அதன் விலை 500 மில்லியன் டாலர் என்று கூறி உள்ளார்கள் .அதிகம் விலை சொன்னால் வாங்க மாட்டார்கள் என்று இவ்வளவு கூறினார்கள். ஆனால் பேஸ்புக் அடுத்த நாலே வங்க ரெடி என்றது . இதனை கண்டு டிவிட்டர் நிறுவனம் அதிர்ச்சியானது. பிறகு இப்போது தான் இது வளர்ந்து வருகிறது என்று கூறி விற்க மறுத்து விட்டார்கள். இந்த தகவலை டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டோன் இந்த தகவலை கூறி உள்ளார்.
இணையதளத்தை பயன்படுத்தும் அனைவரையும் தனது கட்டுபாட்டில் வைத்து இருக்க பேஸ்புக் நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.