துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு விஜய் ,எ.ஆர்.முருகதாஸ் இணையும் கூட்டணி 'கத்தி' . இந்த படம் மிகுந்த எதிர்பார்புகளுடன் இருக்கிறது. ஏனென்றால் முன்பு அவர்கள் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிக பெரிய வெற்றி படம் ஆனது. இதில் விஜய்க்கு இரு வேடங்கள் என்று கூறப்பட்டு வந்தது . ஆனால் அது உண்மையா என்று தெரியாமலே இருந்து வந்தது. இன்று முருகதாஸ் அதனை உறுதி செய்தார். விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் . அந்த கதாபத்திரங்களின் பெயர்கள் கதிரேசன் மற்றும் சுசீந்திரன் ஆகும். இது கேங்ஸ்டர் கதை இல்லை என்றும் கூறி உள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த இரு வேடங்கள் அப்பா மகன் வேடங்கள் இல்லை என்றும் கூறினார்.
அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு விஜய் இந்த படத்தில் இரு வேடங்களிள் நடிக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.