BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 July 2014

1,300 தமிழ் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தது கேரள அரசு !!


கேரளாவின் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் பணிபுரியும் , 1300 தமிழ் ஆசிரியர்களை கேரள அரசு பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது .

கேரளாவின் தேக்கடி உள்ளீட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் . எனவே  அங்குள்ள தமிழ் பிள்ளைகள் தமிழை கற்கும் வண்ணம் 1300 தமிழ் ஆசிரியர்களை   இங்குள்ள தமிழ் மக்களின் கோரிக்கையின் படி கேரள அரசு நியமித்தது . இப்போது திடீரென அங்கு இருக்கும் அனைத்து தமிழ் ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .

தீடிரென்று இந்த அறிவிப்பு வெளியானதால் அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர் . இதனால் அந்த 1300 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளது . அந்த ஆசிரியர்களின் எதிர்காலத்தை சிறிதும் ஆராயாமல் , முடிவு எடுத்துள்ள கேரள அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்துக்குரியது .

தமிழக அரசு கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் , தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த முயற்சி செய்ய வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media