இந்தியாவிலையே சிறந்த இசையமைப்பாளர் யார் என்று இப்போது உள்ள தலைமுறையினரிடம் கேட்டால் அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பதில் ஏ.ஆர்.ரகுமான் ஆகும். அந்த அளவிற்கு தனது இசையின் மூலம் ரசிகர்களை கட்டி போட்டு உள்ளார். இவரிடம் உள்ள சிறப்பு இவர் இசையமைக்கும் பாடல்கள் இவரது சொந்த இசையாக இருக்கும் ,மற்ற மொழி இசையை தழுவி இருக்காது. ஆஸ்கர் விருது வாங்கி ஒரு இந்தியனாலும் ஆஸ்கர் விருது வாங்க முடியும் என்று இந்தியாவின் பெருமையை உலகிற்கு நிருபித்தார். அவர் இப்போது புதிதாக எடுத்து இருக்கும் அவதாரம் தயாரிப்பாளராக.
இந்தி படம் ஒன்றை அவர் தயாரிக்க உள்ளார். இந்த தகவலை அவர் உறுதி படுத்தி உள்ளார். ஆனால் அவரது முழு கவனம் இசையில் இருந்து திரும்பி விடாது என்றார். தான் ஊரில் இல்லாத நேரத்தில் அந்த தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து கொள்ள ஒரு சிறந்த குழுவை அமைத்து உள்ளதாக கூறி உள்ளார். மணிரத்னம், டேனி பாயல் போன்றவர்களோடு பணியாற்றியது அவரது இந்த பணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறி உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.