
சிறியவர்களை கவர்ந்த ஒரு படம் என்றால் அதில் ஸ்பைடர்மேனை கூறலாம். இதில் வரும் ஆடை மிகவும் பிரபலமாகும். அதில் வரும் ஸ்பைடர்மேன் மக்களை காப்பாற்றுவதற்காக வருவார். இந்த படம் ஐந்து பாகங்களாக வந்து உள்ளது. இவை அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இத்னை ஒருவர் தவறாக பயன்படுத்தி கொண்டார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியை சேர்ந்த 25 வயது உள்ள பிஷப் என்னும் வாலிபர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு அங்கு உலாவி கொண்டு இருந்தார். அவருக்கு ஸ்பைடர்மேன் ஆக வேண்டும் என்னும் ஆசை வந்ததால் இது போல செய்தார்.
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் டைம்ஸ் ஸ்கொயர் பகுதிக்கு வந்தார். அங்கு வந்த சுற்றுலா பயணிகளுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். எடுத்த பிறகு 20 டாலர் பணம் தருமாறு தொல்லை செய்தார். இதனை அங்கு இருந்த போலீஸ் ஒருவர் பார்த்தார். அதனை கேட்க வந்தார். ஆனால் அந்த வாலிபர் ஸ்பைடர்மேன் ஸ்டைலில் ஒரு குத்து விட்டார். ஆனால் சுதாரித்து கொண்ட போலீஸ் அவரை கைது செய்தது. நாம் படங்கள் பார்த்து அதற்கு அடிமையானால் இது போல் தான் ஆகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.