
2012 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவை சேர்ந்த ஒருவர் பேட்மிண்டன் விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் வெல்வது அது தான் முதல் முறை. அதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குமிந்து கொண்டு இருந்தன. அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி சாய்னா நெஹ்வாலை பாராட்டும் விதமாக அவருக்கு 50 இலட்சம் பரிசு தொகையை அறிவித்தார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்தது. ஆந்திரா என்றும் தெலுங்கானா என்று ம் அழைக்கப்பட்டது. சாய்னா தெலுங்கானா மாநிலத்தின் குடிமகள் ஆனார். தெலுங்கானாவில் இருப்பதற்காக அவர் பெருமைபடுவதாகவும் கூறினார். ஆனால் அவர் ஒலிப்பிக்கில் பதக்கம் வென்றதற்காக தருவதாக கூறிய 50 இலட்சம் மட்டும் இன்னும் எந்த அரசிடமும் இருந்து வரவில்லை. 2 ஆண்டுகள் ஆகியும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அவரை காய்ப்படுத்தி உள்ளதாக கூறினார்.இது குறித்து அரசு எந்த பதிலும் கூறவில்லை என கவலை படுகிறார்.இந்த தகவலை சாய்னா தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்து இருந்தார். தனக்கு உரியதை தான் கேட்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவருக்கு தரவேண்டியதை தர வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.