BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 July 2014

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிக்க போகும் முதல் திருநங்கை !!


தமிழகத்திலேயே இன்ஜினியரிங் படிப்பிற்கு சீட் கிடைத்த முதல் திருநங்கை என்னும் பெருமையை பெற்று உள்ளார் திருநங்கை கிரேஸ் பானு. இவர் பிளஸ் 2 படிக்கும் போது தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டார். இப்போது கண்ணி அறிவியலில் டிப்ளமோ படித்து உள்ளார். அழகப்பா செட்டியார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைகழக இடங்களை பெறுவதற்கான கவுன்சிலிங்கில் அவர், அரக்கோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி என்னும் தனியார் கல்லூரியில் மின்னணு பொறியியல் (EEE) படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது.



தனக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார். இவர் டிப்ளமோ படிப்பில் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்றார்.
ஜாதியை வைத்து இட ஒதுக்கீடு தருவதை விட இவர்களுக்கு என்று சில இடங்களை ஒதுக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களை ஒதுக்குவது என்பது தவறான செயல் ஆகும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media