BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 July 2014

பாஜகவை உளவு பார்த்த அமெரிக்கா , உண்மை வெளிவருகிறது !!

நமது நாட்டில் ஆட்சியை பிடித்து அரசாங்கத்தை நடத்தி வரும் பாஜக வை அமெரிக்காவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உளவு பார்த்தாக தகவல்கள் வந்து உள்ளது. அவர்கள் பாஜகவை 2010 ஆம் ஆண்டு முதல் உளவு பார்த்து வருகிறார்கள் என்னும் அதிர்ச்சிகுள்ளான தகவலை வெளியிட்டது அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையான வாஷிங்க்டன் போஸ்ட் ஆகும்.இதனை அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடன் கூறியதாக இருக்கிறது. நம் நாட்டை போலவே மேலும் சில நாடுகளில் உள்ள சில முக்கிய கட்சிகளை உளவு பார்த்து உள்ளார்கள். இதற்கு தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறுகிறார்கள். பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உளவு பார்க்காமல் இருக்க அவர்களுடன் ஒப்பந்தம் போட்டு உள்ளார்களாம்.



இது அமெரிக்காவின் கேவலமான செயல் ஆகும். நம்மை உளவு பார்க்க அவன் யார், தட்டி கேட்க வேண்டிய ஐ.நா என்ன செய்கிறது என்று தெரியவில்லை. போகிற போக்கில் நாம் எல்லாரும் அமெரிக்காவிற்கு அடிமை ஆகிவிடுவோம் போல.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media